Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home அகம் & புறம்

துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

விகடகவி by விகடகவி
03/01/2021
in அகம் & புறம்
0
துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!
0
SHARES
577
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீப காலமாக சாதிகளின் பேர் மிக கொடிய சம்பவங்கள் நாம் வாழும் இந்த சமூகத்தில் நடந்தேறி வருகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் நம்முடன் வாழும் சக மனிதனிடம் அதிகப்படியான ஏற்ற தாழ்வுகள்…

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனையோ தேச தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அரும்பாடு பட்டனர். ஞானிகளும் மகான்களும் எளியோர்க்கு உபதேசம் செய்தார்கள் ஆனால் இந்த ஏற்ற தாழ்வுகள் மாரியபாடில்லை. அது இருக்க அனைவராலும் வெறுக்கப்பட்ட துரியோதனனும் சாதிகள் இல்லை என்று முழக்கமிடுகிறான்.

ஒருமுறை அரச குமாரர்கள் பங்குபெறும் போட்டியில் கர்ணனின் வீரம் அவன் பிறப்பால் ஒதுக்கப்படும் போது துரியோதனன் வெகுண்டு எழுந்து கர்ணனை அங்கதேசத்து மன்னனாக முடிசூட்டி கௌரவித்தான். இது நாம் அனைவருக்கும் தெரிந்த கதையே. இந்த காட்சி “கர்ணன்” திரை படத்தில் மிக அழகாக காட்சி படுத்த பட்டுள்ளது. உங்களுக்காக கீழே அந்த காட்சியை பதிவிடுகிறேன்.

கர்ணன் 1964 – வில்வித்தை போட்டி & துரியோதனன் நட்பு

அவ்வாறு கர்ணனின் வீரம் பிறப்பாலும் இனத்தாலும் அவமதிக்கப்படும் போது துரியோதனன் தன் ஆசான் துரோணாச்சார்யர் அவர்களுக்கே “சாதிகள் இல்லை” என்று பாடம் கற்பித்தான். துரியோதனன் கூறியதாவது,

கற்றவர்க்கும், நலம் நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோது இல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும், ஒன்று சாதி; நன்மை தீமை இல்லையால். – 67
அரி பிறந்தது, அன்று, தூணில்; அரனும் வேயில் ஆயினான்;
பரவை உண்ட முனியும், இப் பரத்துவாசன் மைந்தனும்,
ஒருவயின்கண், முன் பிறந்தது; ஒண் சரத்தின் அல்லவோ,
அரிய வென்றி முருகவேளும் அடிகளும் பிறந்ததே? – 68

வில்லிபுத்ரர் | வில்லிபாரதம் – வாரணாவதச் சருக்கம்

பொருள்:

படித்தவர்களுக்கும், அழகுடைய பெண்களுக்கும், கொடை வள்ளல்களுக்கும், வீரர்களுக்கும், சிறந்த அரசாட்சி புரிந்தவர்க்கும், உண்மையான குற்றமற்ற ஞானத்தையும் ஒழுக்கத்தையும் உடையவர்களுக்கும் சாதி ஒன்றே. உயர்வு தாழ்வு என்ற பாகுபாடில்லை.

முற்காலத்தில் திருமால் பிறந்தது தூணில் – அந்த தூண் அவரது அன்னையா?

கடலை பருகிய முனிவர் அகத்தியரும், பாரத்துவாஜர் மகனான துரோணாச்சார்யார் இருவரும் கும்பத்தில் பிறந்தவர்கள் (டெஸ்ட்யூப் பேபி) – அந்த கும்பம் அவர்களுடைய அன்னையா?

பிறரால் தோற்கடிக்கவே முடியாத வெற்றியை உடைய முருக கடவுள் ஒரு சரீரத்தில் இருந்து வர வில்லை, அவர் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றியவர் – நெற்றிக்கண் அவரது அன்னையா?

உட்கருத்து:

பிறப்பால் ஒரு மனிதரை உயர்த்தியும் தாழ்த்தியும் பாகுபாடு செய்வது ஐம்பெரும் பாவங்களை காட்டிலும் கொடிய செயல்… ஒரு மனிதன் கல்வியால், வீரத்தால், பண்பால், ஒழுக்கத்தால், அழகால், குணத்தால் மட்டுமே உயர்வடைகின்றான்.

Previous Post

உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!!

Next Post

குதிரை வண்டிக்காரன்

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
Swami Vivekananda at Parliament of Religions

குதிரை வண்டிக்காரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

சிற்றினஞ்சேராமை - பொருட்பால்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
விளக்கம்:
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

பிரபலமான இடுகைகள்

Dream about dog meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

25/08/2024
அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

24/08/2024
Dream about elephant meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

07/01/2025
Tamil Baby Girl Names Starts with A
பெண் குழந்தை பெயர்கள்

ஆ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

09/01/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version