Vasagam
DigitalOcean Referral Badge
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்
No Result
View All Result
Vasagam
Home ஆன்மீகம்

ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள்: என்ன வித்தியாசம்?

விகடகவி by விகடகவி
26/01/2025
in ஆன்மீகம்
0
Comparative illustration of spiritual paths in Indian tradition - Rishis, Siddhas, Munis, Yogis, and Ascetics

Image by Freepik/ckybe

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா ஆன்மீக மரபுகளில் மிகவும் சிக்கலான மற்றும் பல்வேறு பரிமாணங்கள் உள்ளடக்கிய ஒரு பரந்த பூமி ஆகும். மனிதர்கள் ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய பல வழிகளைப் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஆன்மீக பாதையில் துறவு, யோகம், மௌனம், சித்தம் மற்றும் தவம் என பல்வேறு பிரிவுகளும், பாரம்பரியங்களும் உள்ளன. இவற்றின் எல்லைகளை அடைந்த ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள் போன்ற இவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களுக்குள் என்ன வித்தியாசம்? என்பதைக் விரிவாகப் பார்ப்போம்.

1. ரிஷிகள் (Rishis)

ரிஷிகள் வேதகாலத்திற்கும் முந்தைய பிரபல ஆன்மிகர்கள். இவர்கள் வெவ்வேறு கலைகளிலும் அறிவியலிலும் வல்லவர்களாக விளங்கினார்கள். நாகரீகங்களையும் அறிவியல் மேம்பாட்டையும் சிகிச்சை முறைகளையும் வடிவமைத்தவர்.

சப்த ரிஷிகள்: அகத்தியர், அத்ரி, அகிரர், பிருகு, கௌதமர், கசியபர் மற்றும் வசிஷ்டர்.

தன்னுடைய உச்சத்தை முழுமுதல் யோகியான ஆதிசிவன் தொட்டபோது, பலரும் அவர் ஜோதியால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் மிக முக்கியமானவர்கள், சப்தரிஷிகள் என்று அழைக்கப்பட்ட இந்த ஏழு முனிவர்கள். ஆதியோகியின் புரிதலையும் ஞானத்தையும் பெற்று பூமி முழுமைக்கும் விநியோகிப்பதற்கான பாத்திரங்களே அவர்கள். சிவனிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் ஒலியினை உள்வாங்கி அதன்மூலமாக வேதங்கள், உபநிடதங்கள், மந்திரங்கள், புராணங்கள், இறைவனை அடைவதற்கான வழிமுறைகள், ஞானங்கள் ஆகியவற்றை உலகிற்கு அளித்தவர்கள். அதனாலேயே இந்த ரிஷிகள் அணைத்து புராணங்களிலும் ஆங்காங்கே தென்படுவார்கள்.

2. சித்தர்கள் (Siddhars)

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். சித்தி என்றால் ‘அறிவு’, சித்தை உடையவர்கள் சித்தர்கள். “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது உள்ளார்ந்த பொருள். வானியல், கணிதம், மருத்துவம், யோகம், அறிவியல், புவியியல் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றுள் உயர்த்த ஞானத்தை பெற்றவராவர். அந்த ஞானத்தை கொண்டு அட்டமா சித்துக்களை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

திருமந்திரம் விளக்கும் அட்டமா சித்திகள்:

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,

திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,

பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகைபிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி

மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகைவசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

திருமூலர்

அட்டமா சித்திகள் விளக்கம்

  1. அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  7. ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

சித்தர் வாழ்வினை வரையறுத்தவர் சித்தர்களுக்கெல்லாம் சித்தரான அகத்தியர். இவரே தமிழ் மொழிக்கு இலக்கணம் பிறப்பித்தவர் அதன்வழி தோன்றலாலே சித்தர்கள் தமிழர்களுக்கே உரித்தான ஒரு ஆன்மீக வழி. “சித்தி” என்ற சொல் கூட தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது, இது ஆன்மிக வளர்ச்சியில் உச்ச நிலைமையை குறிக்கிறது. சித்தர்கள் ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும், அறிவியலிலும் முன்னோடிகள். தமது வாழ்க்கையை முழுமையாக பொதுநலனுக்காக அர்ப்பணித்தவர்கள்.

3. முனிவர்கள் (Munivars)

முனிவர்கள் அல்லது மௌனிகள், முனி என்பது சமஸ்கிருத சொல் “முனீஸ்” என்பதிலிருந்து வந்தது. கிரேக்கத்தில் “முனி” என்றால் மாயாஜாலம் அல்லது தந்திரம் செய்பவர்கள் என பொருளாகிறது. முனிவர்கள் நீண்ட நெடிய தவத்தால் முக்தியம் அளவிட முடியாத சக்தியும் பெற்று இறைவனுடைய திருவடிகளை அடைவார்கள். ஆன்மீக வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கப்படுவார்கள்.

முனிவர்களின் சிறப்பு: பிரபஞ்ச உண்மைகளை அறிவதற்கும், மும்மலங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை இவற்றை விட்டொழித்து இறைவனை அடைவதற்கும், கடும் தவம் செய்வார்கள்.

4. யோகிகள் (Yogis)

யோகிகள் என்பவர்கள் யோககலையிலும் ஆயூர்வேத மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் உடல் மற்றும் மன அமைதியை பெற, யோகாசனங்கள், பிராணாயாமா மற்றும் தியான முறைகளைப் பின்பற்றுவார்கள்.

யோகியின் பணிகள்:

  • யோகத்தினால் உடல், மன நலத்தை மேம்படுத்துதல்.
  • பிராணாயாமம், தியானம், உடல் கட்டுப்பாடு.

5. துறவிகள் (Sannyasis)

துறவிகள் என்பது சமஸ்கிருத வார்த்தையான “சந்நியாசி” என்பதன் தமிழ் சொல்லாகும். துறவிகள் உலக இன்பங்களை துறந்து, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் ஆசையை துறந்து, தியானம், வேதப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

துறவிகளின் பணி: உலகம் முழுவதும் உள்ள மதங்களை சார்ந்து, ஆன்மீகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பது.

ஆன்மீக உலகில் தர நிலை (Hierarchy in the Hindu Spiritual World)

இந்த ஆன்மீக உலகில், ஒவ்வொரு ஆளுமையும் வெவ்வேறு நிலைகளை வகிக்கின்றனர். பொதுவாக:

  1. ரிஷிகள்: உன்னதமான ஞானிகள், வேத சாஸ்திரங்களை எழுதுபவர்கள்.
  2. சித்தர்கள்: அறிவியல், மருத்துவம், ஆன்மீகத்திலும் பரிணாம வளர்ச்சி பெற்றவர்கள்.
  3. முனிவர்கள்: தியானம் மூலம் பிரம்மத்தை உணரும் முனைந்தவர்கள்.
  4. யோகிகள்: உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒற்றுமையை அடைவதற்கான உச்ச நிலை.
  5. துறவிகள்: உலக ஆசைகளை துறந்து முழுமையாக தெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்படுபவர்கள்.

ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள் ஆகியோருக்குள் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையான வழியில் ஆன்மிக வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். நாம் எந்தவொரு வழியையும் பின்பற்றினாலும், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஆன்மீக உயர்வை அடைய முடியும்.

Tags: கடவுள்சித்தர்சிவன்தமிழ்வழிபாடு
Previous Post

பசு கனவு பலன்கள் – பொருள் மற்றும் பரிகாரங்கள்

Next Post

இ-ல் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு. தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

Next Post
Unique Tamil boy names starting with the letter E, showcasing traditional and modern naming options

இ-ல் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

வள்ளுவன் வாக்கு

தீவினையச்சம் - அறத்துப்பால்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
விளக்கம்:
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

பிரபலமான இடுகைகள்

Dream about dog meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் நாய் வந்தால் என்ன பலன்

25/08/2024
அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை பெயர்கள்

அ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

24/08/2024
Dream about elephant meaning interpretations
கனவு பலன்கள்

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

07/01/2025
Tamil Baby Girl Names Starts with A
பெண் குழந்தை பெயர்கள்

ஆ-வில் தொடங்கும் தமிழ் பெண் குழந்தை பெயர்கள்

09/01/2025
Facebook Twitter Pinterest Instagram RSS
Vasagam

Vasagam, A digital patron of Tamil heritage by publishing old stories, facts behind every belief, literature, old technology, science, ancient medicines, food and history.

General

  • About Us
  • Contact Us
  • Sitemap

Legal

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Cookie Policy

© Vasagam. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • அகம் & புறம்
  • ஆவாது
  • கதைகள்
    • கதாபாத்திரங்கள்
    • மாமனிதர்கள்
    • சிறுகதைகள்
    • நீதி கதைகள்
    • ஜென் கதைகள்
    • காதல் கதைகள்
    • குடும்ப கதைகள்
    • கிரைம் த்ரில்லர் கதைகள்
    • பேய் கதைகள்
    • சுட்டிக் கதைகள்
    • பக்தி கதைகள்
  • இலக்கியம்
  • கவிதைகள்
  • வாழ்த்து
  • பெயர்கள்
    • பெண் குழந்தை பெயர்கள்
    • ஆண் குழந்தை பெயர்கள்
    • தொழில் பெயர்கள்
  • ஆன்மீகம்
    • ஜோதிடம்
    • கனவு பலன்கள்
  • மேலும்
    • தொழில்நுட்பம்
    • பணம்
    • மருத்துவம்
    • வரலாறு
    • அறிவியல்

© Vasagam. All Rights Reserved.

Go to mobile version