கோவிலின் கதவை மூடிக் கொண்டே என் தாத்தா பேசத் தொடங்கினார்.
“நம்ம ஊருக்கு வடக்குல ஒரு பழைய மாளிகை இருக்குறது தெரியுமா?”
கேட்டவுடனே பக்கத்து வீட்டு பாண்டி உடனே சொன்னான்,
“அது பேய் வீடாம் தாத்தா! இந்த ஊர்ல யாரும் அங்கே போக மாட்டாங்களே.”
தாத்தா ஒரு சிரிப்பு சிரித்தார். “பேய் வீடா? இல்லை இல்லை அந்த வீட்ல நடந்த சம்பவத்தால யாரும் அங்க போக மாட்டாங்க!”
நாங்கள் ஆர்வமாக கேட்டோம், “என்ன சம்பவம் தாத்தா?”
“நாளைக்கு அமாவாசை. அந்த வீட்டுக்கு யாராவது போய் தங்கியிருந்து வந்தா உண்மை புரியும்,” தாத்தா சவாலாகச் சொன்னார்.
நாங்கள் ஒருவரைப் ஒருவர் பார்த்தோம். அனைவரும் சிறிது நேரம் அமைதியானோம், யாரும் பதில் அளிக்கவில்லை. தைரியமாக நானே முன்வந்தேன். “நான் போயிட்டு வரேன்!” என்றேன்.
அந்த இரவு.
ஊருக்கு வடக்கில் இருக்கும் அந்த பழைய மாளிகைக்குள் நுழைந்தேன். அங்கே பண்டைய கால வாசல்கள், தூசிபடிந்த சுவர் ஓவியங்கள், எங்கும் அமைதி. நான் எந்த கவலையும் படாமல் இருந்தேன். ஆனால் தூரத்தில் என்னவோ தோன்றியது…
முன் அறையில் ஒரு நிழல் நகர்ந்தது. பின்புறத்திலே கதவு தட்டும் சத்தம்…
என்ன நடக்குது? நிஜமாவே அமானுஷ்யமா?
உடனே தப்பித்து ஓடிவிடலாம் என் எண்ணி வேகமாக வந்து வாயில் கதவைத் திறந்தேன்!
ஒரு கருப்பு உருவம் நின்றுகொண்டிருந்தது, நன் வெலவெலத்து போனேன். என்னால் மூச்சு விட முடியவில்லை…
பிறகு யாரோ என் தோலில் கைவைத்தார் போல தோன்றியது திரும்பி பார்த்தேன் அது என் தாத்தா தான்.
அப்போதுதான் எனக்கு மூச்சு வந்தது சற்று நிதானம் அடைந்தேன், தாத்தா நான் பயந்து நிற்பதை பார்த்து சிரித்தார், பின்பு அது என்ன சாபம் தாத்தா என்று கேட்டேன்?
டேய் ராமு எழுந்திரு என்று என் அம்மா என்னை தட்டி எழுப்பினால்,
வேர்க்க வியர்க்க எழுந்தேன், எழுந்திரிச்சு ரெடி ஆகுடா தாத்தாவிற்கு இன்னைக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்…
இருட்டுவதற்குள் நாம் நம்முடைய பழைய அரண்மனைக்கு போய் தாத்தாவிற்கு பிடித்த உணவு பண்டங்களை வைத்து பூஜை செய்து அவரை வணங்கிவிட்டு வருவோம் இருட்டிய பிறகு அரண்மனைக்குள் போக மாட்டோமே என்றால் அம்மா.
அப்போ தான் எனக்கு தூக்கத்தில் இருந்து நினைவு வந்தது, அனைத்தும் கனவா! சீக்கிரமாக பழைய அரண்மனையின் அழிக்க முடியாத சாபத்தை கண்டு புடிக்க வேண்டும் என எண்ணியவாறே குளிப்பதற்கு சென்றான்.
ராமு வேகமாக குளித்து முடித்துவிட்டு, தன் அம்மாவுடன் பழைய அரண்மனைக்குச் செல்ல தயாரானான்.
அரண்மனைக்கு சென்றபோது, அம்மா வழக்கம்போல தாத்தாவுக்காக உணவுகளை சமர்ப்பித்து, நாங்கள் அனைவரும் வணங்கினோம்.
அத்தனை நேரமும், என் மனதில் ஒரே ஒரு கேள்வி…
“அந்த சாபம் உண்மையா? அதைக் கண்டுபிடிக்கலாமா?”
நான் நிச்சயமாக அந்த இரவு அரண்மனைக்குள் செல்ல முடிவு செய்தேன்.
அந்த இரவு, அனைவரும் உறங்கிய பிறகு நான் மெதுவாக அரண்மனைக்குள் நுழைந்தேன்.
இருள் சூழ்ந்த அரண்மனையில் எங்கு பார்த்தாலும் பழைய ஓவியங்கள், தூசிபடிந்த மரப்பலகைகள்… பதற்றம் அதிகரித்தது.
சற்றுநேரத்தில் ஒரு குளிர் அடித்தது…
அந்தக் கணத்தில் பின்புறத்திலிருந்து யாரோ அழைக்கும் சத்தம்!
“ராமு… நீ வந்துவிட்டாயா?”
என் இதயம் பிதுங்கியது.
“யார்… யார் அங்கிருக்கீங்க?” நான் நடுங்கிய குரலில் கேட்டேன்.
மெதுவாக அந்தக் குரல் மேலும் நெருக்கமாகியது.
“நீ என்னை விடுவிக்க வந்திருக்கியா…? இல்லையா?”
அரண்மனை முழுக்க பழைய கதவுகள் தானாகச் சத்தம் போட்டுக்கொண்டு மூடிக்கொண்டன.
அந்த இருளில், ஒரு கோழி முட்டையளவு சிவப்பு கண்கள் தெரிந்தன…
உடம்பு முட்டும் நடுங்க… அந்த கண்கள் என்னை பார்க்க தொடங்கின.
அதற்குள் வெளியே இருந்து அம்மா கூச்சலிட்டாள் – “ராமு… உடனே வெளியே வா! இப்போ!”
நான் வெளியே ஓடினேன். கதவு சப்தம் செய்து தானாக மூடியது.
அம்மா, என்னை இறுகப் பற்றிக் கொண்டாள். “நீ எங்கே போனாய்?”
நான் பதறிய குரலில் கேட்டேன் – “அம்மா… அந்த சாபம் உண்மையா?”
அம்மா ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தார்.
பிறகு மெதுவாக சொன்னாள் – “இந்த உலகத்துக்கு அது சாபம்…
ஆனால்… உன்னுக்கு அது வழிவழி வந்துள்ள ஒரு கடமை, ராமு!”
“உன் தாத்தா மட்டுமல்ல… நீயும் அந்த சாபத்தோட பாகம் தான்!”
😨💀 (தொடரும்…)